காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சியம்மன் கோவிலில், மார்கழி மாதம் 2-வது வார வெள்ளிக் கிழமையை ஒட்டி, தங்கத்தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. சரஸ்வதி, லட்சுமி தேவியருடன் திருக்கோவில் உட்பிரகாரத்தில் காமாட்சியம்மன் வலம் வந்த தங்கத்தேரை, திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.