நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தந்தி மாரியம்மன் கோவில் முத்துப்பல்லக்கு வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அபிஷேக, அலங்கார பொருட்கள், பால்குடம் ஆகியவை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்ற பின்னர், மேள தாளங்கள் முழங்க முத்துப்பல்லக்கு வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது.