கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து அதிலிருந்த எத்தனால் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலத்திலிருந்து டேங்கர் லாரியில் 40 ஆயிரம் லிட்டர் எத்தனாலை ஏற்றிக் கொண்டு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அணில் ஃபார்மர் திருச்சி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் எறைஞ்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுநர் கண் அயர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஐந்து அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த போலீசார் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், டேங்கர் லாரியில் இருந்து வெளியேறிய எத்தனாலால் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.