கோடைகால வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி சுமார் 15 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு 60 லட்சம் முட்டைகளின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் மயோனைஸ் தடையால் முட்டை விற்பனைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறிய அவர், கடந்த 2 நாட்களில் முட்டை விலை 15 காசுகள் வரை உயர்ந்துள்ளதாகவும், வரும் நாட்களில் முட்டை விலை 5 ரூபாய் வரை உயர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.