சென்னை மேடவாக்கத்தில் swiggy ஊழியரை தாக்கி 10 ஆயிரம் ரொக்கம், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை ஒரு கும்பல் வழிப்பறி செய்த சம்பவம் நடந்தேறியது. திண்டிவனத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் மேடவாக்கத்தில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், இயற்கை உபாதை கழிக்க நண்பர்களுடன் சென்றிருக்கிறார். அப்போது நண்பர்கள் திரும்பி சென்ற நிலையில் கணேஷை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகன சாவியால் கொடூரமாக தாக்கினர். இது குறித்து தகவலறிந்த அவர்களது நண்பர்கள் வந்ததையடுத்து 5 பேர் தப்பித்த நிலையில் ஒரு சிறுவனை மட்டும் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.