கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படமான சூர்யா 45 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மாசாணி அம்மன் கோவில் தொடங்கியது. முன்னதாக கோவில் அறங்காவலர் குழு நடிகர் சூர்யாவை வரவேற்று பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். அதனை தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யாவுடன் மக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து கொண்டனர்.