சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து பணிமனைக்கு சென்ற புறநகர் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. காலை 11 மணியளவில் 15 கிலோ மீட்டர் வேகத்தில் புறநகர் மின்சார ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி பணி மனைக்கு சென்றது. ராயபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, ரயிலின் நான்காவது பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது.விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் தடம்புரண்ட ரயில்பெட்டியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.