ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை அடுத்த கொன்னங்குடி பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வருவதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யும் அளவிற்கு நெற்பயிர்கள் விளைந்துள்ள நிலையில், சிறுவண்டல், பெருவண்டல், கலியநகரி, ஆயிரவேலி, மாடம்பூர் உள்ளிட்ட கண்மாய்கள் நிரம்பி வருவதால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.