ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டு தங்கள் பகுதி பாதிப்புகளை எடுத்துரைத்தனர்.