தர்மபுரி மாவட்டம் ஜெல்மாரம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவ, மாணவியர் மரத்தடியில் கல்வி பயிலும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்த இப்பள்ளி கடந்த 2018ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்ப பள்ளியில் போதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை என கூறப்படுகிறது.