தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கோவிலுக்குள் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்றதால் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர். கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை காரணமாக, கண்டியூரில் உள்ள பிரசித்தி பெற்ற அரச விமோசன பெருமாள் கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் 3 அடி உயரத்திற்கு மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.