விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தனமாரியம்மன் கோவிலில், சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது.தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் இறங்கி, ஆண்கள்-பெண்கள் என ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.