புதுச்சேரி காரைக்கால் ஸ்ரீ சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த மாதம் 15ஆம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கிய இவ்விழாவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. சிலம்பாட்டத்துடன் கரகம் ஏந்தியபடி ஊர்வலமாக சென்ற பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தீக்குழியில் இறங்கி வழிபட்டனர்.