நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலை கண்டித்து, செருதூர் மீனவ கிராமத்தினர் 3-வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், ஆற்காட்டுதுறை, செருதூர் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த 23 மீனவர்கள் 5 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, அவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, மீனவர்களின் படகுகளில் இருந்து பொருட்களை பறித்து சென்றனர்.