சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பம்பைக்கு விரைவு பேருந்துகள் தொடங்கிய நிலையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் பம்பை புறப்பட்டனர். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நவம்பர் 15 முதல் ஜனவரி 16-ம் தேதி வரை சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூரிலிருந்து பம்பைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல் பம்பையிலிருந்தும் முதன்முறையாக கிளாம்பாக்கத்திற்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில் அனைத்து வசதிகளுடன் சிரமமின்றி பயணித்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.