வேலூர் மாவட்டம் பாகாயத்தில் சொந்த மாமனார் வீட்டிலேயே கொள்ளையடித்த மருமகனை போலீசார் கைது செய்தனர். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரான சாலமன், மகள் ராதிகா மருமகன் சாம் ஜெபதுரையுடன் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில், திருமண நிகழ்ச்சிக்காக மகளுடன் சென்னை வந்துள்ளார். தொடர்ந்து திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 57 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை அறிந்து, பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் நகையை திருடிய சாம் ஜெபதுரை மற்றும் அவரது கூட்டாளி உசேன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்ததோடு, நகைகளை பறிமுதல் செய்தனர்.