சிவகங்கையில் திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தை மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மகனை போலீசார் கைது செய்தனர். அகிலாண்டபுரம் பகுதியை சேர்ந்த மாரி என்பவருடைய மகன் அன்புச்செல்வம். வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றித்திரிவதாக கூறப்படும் நிலையில், அடிக்கடி திருமணம் செய்து வைக்க வேண்டும் என தகராறில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்த மாரியிடம் தகராறில் ஈடுபட்ட அன்புச்செல்வன் சரமாரியாக தாக்கியதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.