கரூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரிய குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த நாவீத் அஹமத் தனது சைலோ காரை சர்வீஸ் விடுவதற்காக சென்றபோது, அவரும் சர்வீஸ் சென்டரில் இருந்த மெக்கானிக்கும் காரை ஓட்டிப் பார்க்க சென்றுள்ளனர். தொடர்ந்து ராம் நகர் பிரிவு அருகே சென்ற போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்த அவர்கள் உடனடியாக கீழே இறங்கிய நிலையில் தீ மளமளவென பிடித்து கார் முழுவதும் பற்றி எரிந்து சேதமடைந்தது.