கன்னியாகுமரி மைலோடு பகுதியில் விபத்தில் உயிரிழந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், ஊரே திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது. திருநெல்வேலி டக்கம்மாள்புரத்தில் வசித்து வந்த கட்டட கான்ட்ராக்டர் தனிஷ்லாஸ், மனைவி மார்க்ரெட் மேரி, மகன் ஜோபர்ட், மருமகள் அமுதா, பேரக்குழந்தைகள் ஜோகனா, ஜோபினா, ஜோகன் ஆகியோருடன் சொந்த ஊரான மைலோடுக்கு சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பினார். அப்போது, நாங்குநேரி தளபதி சமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த இன்னோவா கார், கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனை உடைத்துக் கொண்டு, இவர்களது கார் மீது மோதியது. இதில், ஜோபினாவை தவிர மற்ற 6 பேரும் உயிரிழந்தனர்.