கலைஞர் கருணாநிதி முதலமைச்சரான பிறகுதான் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இடம்பெறத் தொடங்கியதாக அமைச்சர் கோவி.செழியன் கூறினார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய அவர், திமுகவை போல இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் இல்லை என்றார்.