ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் போதிய ஊழியர்கள் இல்லாததால் தினந்தோறும் நோயாளிகள் அவதியடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ளூர் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்களும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் புறநோயாளிகளுக்கு ஓபி சீட்டு வழங்க மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இல்லாததால், நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.