தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்த மும்பையை சேர்ந்த மருந்து நிறுவன உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மும்பையை சேர்ந்த AIPEX WORLDWIDE SURFACE COMPANY என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மூலம் போதை மாத்திரைகள் கூரியர் மூலம் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மும்பை சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீஸார், தனியார் மருந்து நிறுவன உரிமையாளர் சதானந்த் பாண்டே என்பவரை கைது செய்து விமானம் மூலம் தமிழகம் அழைத்து வந்தனர்.