கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி அருகே அமைந்துள்ள பன்றி பண்ணையில் உள்ள கழிவுகள் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் ஆட்சியரகத்தில் புகார் மனு அளித்தனர். சிறை குளத்தங்கரை பகுதியில் லூக்காஸ் என்பவருக்கு சொந்தமான பன்றி பண்ணையில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும், கழிவு நீர், அங்குள்ள குடிநீரில் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.