சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன், கஞ்சா வழங்கிய காவலர் சண்முக குமார் பணி நீக்கம் செய்யப்பட்டார். சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் செல்போன் பயன்பாடு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, மூன்றாவது பிளாக்கில் மூன்று செல்போன்கள், சிம் கார்டுகள், சார்ஜர்கள் கண்டறியப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. அதில், காவலர் சண்முக குமார் பணம் பெற்றுக்கொண்டு செல்போன் மற்றம் கஞ்சா வழங்கியதாக கைதிகள் ஒப்புகொண்டதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற முழு விசாரணைக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டார்.