தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் அறம் வளர்த்த நாயகி உடனுறை கம்பகரேஸ்வரர் கோவிலில் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக்கும் சரபேஸ்வரருக்குசித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ருத்ர ஜெப ஹோமமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.