புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோயில் இடப்பிரச்சனை தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஒரு தரப்பினர் கோயில் வளாகத்தை சுத்தம் செய்ய முயன்றதால், மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடகாடு பகுதியில் உள்ள கோயில் இடம் தொடர்பாக இரண்டு சமூக மக்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், சமாதான கூட்டம் நடத்தப்பட்டு அதன்படி நீதிமன்றத்தில் தொடந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சமாதான கூட்டத்தில் ஒப்புக்கொண்டதற்கு மாறாக ஒரு தரப்பினர் கோவில் இடத்தில் உள்ள செடிகளை அகற்றி கோவில் வளாகத்தை சுத்தம் செய்ததால் மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.