குமரி மாவட்டம் புதுக்கடை அருகே மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, தட்டக்கேட்ட கணவரின் உதட்டை கடித்து காயப்படுத்திய புகாரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரை போலீஸார் கைது செய்தனர். வேங்கோடு பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில், வீட்டிற்கு அருகில் மளிகைக்கடை வைத்திருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராபர்ட் அவருக்கு ஆபாசமாக பேசி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, வெளிநாட்டில் இருந்து வந்த லாரன்ஸிற்கும், ராபர்டிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.