திண்டுக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு எம்.ஜி.ஆரின் பெயரை மாற்றி கலைஞர் பெயர் வைப்பதற்காக் திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் அதிமுக கவுன்சிலர்கள், கூட்டரங்கிற்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயரை, மாற்றம் செய்யக்கூடாது என கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.