தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பெரியசாமி அய்யனார் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்தனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு கோயிலை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த 40க்கும் மேற்பட்ட பக்தர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.