புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தாமல் பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் இருந்து பொன்னமராவதிக்கு செல்லும் பேருந்தின் ஓட்டுநர், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்காது எனக் கூறி கதவை மூடி ஓட்டிச் சென்றுள்ளார். அதனை பேருந்தில் பயணம் செய்த பயணி வீடியோ எடுத்தபோது வீடியோ எடுத்து என்ன செய்யப் போகிறாய்? எனக் கேட்டதோடு பத்துக்கும் மேற்பட்ட பயணிகளை அலைக்கழித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் தற்காலிக ஓட்டுநர் செல்லையா பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் நடத்துனர் ஆண்டிச்சாமி பணியிடை நீக்கம் செய்யப்பாட்டார்.