நீலகிரி மாவட்டத்திற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு உதகை சென்றது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பெயரில் கனமழை மற்றும் பேரிடர் சமயங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பதற்கு உண்டான அதிநவீன உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தற்பொழுது தயார் நிலையில் உள்ளது.