ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டியை அடுத்த அட்டப்பாடியில் தங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நடிகர் ரஜினிகாந்தை காண குவிந்த ரசிகர்களுக்கு மத்தியில், தீவிர ரசிகர் ஒருவர் கையில் சூடத்தை ஏற்றி ஆரத்தி காண்பிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 20 நாட்களுக்கும் மேலாக ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக அட்டப்பாடியில் தங்கியுள்ள ரஜினிகாந்தை பார்ப்பதற்கு காலை, மாலை என இரு வேளைகளிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களை பார்த்த ரஜினிகாந்த் அவர்களை பார்த்து கை அசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.