திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி, கார் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் காயம் அடைந்தனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் தம்பதி, தேனியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக கருக்காம்பட்டியில் சாலையில் மழைநீர் தேங்கி இருந்து ஒரு அடி ஆழமுள்ள பள்ளத்தில் கார் சிக்கி தலைகுப்புற கவிழ்ந்தது.இதில், காரில் பயணம் செய்த நாகராஜ் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் தப்பினர்.