கிருஷ்ணகிரி நகரில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.கிருஷ்ணகிரி நகரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்படுவதாக கடந்த சில நாட்களாக எழுந்த புகார் அடிப்படையில், நகர மன்ற தலைவர் பரிதா நவாப் மற்றும் ஆணையாளர் ஸ்டான்லி பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.