கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையால் மூன்றாம் ஆண்டு மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் சீனியர் மாணவர்கள் இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரியின் மாணவர் விடுதியில் கடந்த 24 ம் தேதி, மூன்றாம் ஆண்டு மாணவர் ஆலன் கிரைசா, சீனியர் மாணவர்களான கவின், தியானேஷ் ஆகியோர் ராகிங் செய்யப்பட்டு பீர் பாட்டிலால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் மாணவர்கள் இருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவன் தியானேஷ் டிஎஸ்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.