கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதி கூட இல்லாத புதுக்குட்டை பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். பழுதடைந்த சாலைகளால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைவதாகவும், மின்கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து, கம்பிகள் எலும்புக்கூடு போல் காட்சியளிப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் குடிநீர் வசதியும் இல்லாததால் மூன்று கிலோ மீட்டர் வரை சென்று தண்ணீர் எடுத்து வருவதாக தெரிவித்த மக்கள் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.