கரூரில் வாகன சோதனையின் போது, புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 279 மதுபாட்டில்கள், 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக, உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.