ராமநாதபுரத்தில், இருவழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மதுரை மேலூரில் இருந்து சிவகங்கை வழியாக, ராமநாதபுரம்- கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கக்கூடிய இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் துவங்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் மந்த கதியில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட விரைவாக செல்லமுடியவில்லை என கூறும் மக்கள் வேளாண் பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.