ஈரோடு மாவட்டம் காதக்கிணறு பகுதியில் செயல்படும் தனியார் பால் நிறுவனத்தின் முன்பாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 24 மணி நேரமும் இயங்கும் இந்த பால் நிறுவனத்திலிருந்து வெளியேறும் தூசி மற்றும் துர்நாற்றத்தால் காதக்கிணறு, செம்மண்குழிபாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.