ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே குண்டும் குழியுமாக உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வாலாஜாபேட்டை அருகே சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், 13.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் பணிகளுக்காக நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.