திருச்சி திருவெறும்பூர் அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பிரபல கலர் லேப் உரிமையாளர் மகனை போலீஸார் கைது செய்தனர். தென்னூர் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த சம்பத் மகன் விமல்குமார், போதை பொருட்களை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 3 கிராம் எம்டிஎம்ஏ போதை மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டன.