தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா வைத்திருந்த 6 பேரை கைது செய்த போலீஸார், 24 கிலோ கஞ்சாவையும், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஐ போன்களையும் பறிமுதல் செய்தனர். போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மூப்பன்பட்டி சுடுகாடு அருகேயும், கோவில்பட்டி பாரதி நகர் பகுதியிலும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.