திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் மழைநேரத்தில் காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்ற நால்வரை கையும், களவுமாக பிடித்து கொடுத்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விடுவித்து விட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தண்டலம் கிராமத்தில் சமீபத்தில் மழை பெய்த போது, காரில் வந்த 4 பேர் ரஞ்சித் என்பவரது வீட்டிலிருந்த ஆடுகளை வாயை கயிறால் கட்டி கடத்திச் செல்ல முயன்றனர். இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் கூச்சலிட பொதுமக்கள் திரண்டு, காரை வழிமறித்து ஆடுகளை மீட்டதோடு, அதிலிருந்த 4 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து செவ்வாப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.