பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே தாழ்வாக பறந்த போர் பயிற்சி விமானங்களால் பரபரப்பு ஏற்பட்டது. கீழப்பெரம்பலூர், வயலூர், வயலப்பாடி, வேள்விமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணியளவில் போர் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் 2 விமானங்கள் மூன்று முறை தாழ்வாக பறந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் விமானங்களில் இருந்து 8 முறை தீப்பொறி கீழே விழுந்ததால் அச்சமடைந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர். இதனிடையே தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் விமானப்படை பயிற்சி தளத்திலிருந்து பயிற்சிக்காக போர் விமானங்கள் பறந்ததாக கூறப்படுகிறது.