கோவை அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து பெற்றோரும் நடனமாடி மகிழ்ந்தனர். சின்னவேடம்பட்டி கே.சர்ஸ் பள்ளியில் நடைபெற்ற விழாவை கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் தொடங்கி வைக்க, தமிழர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும், கிராமிய இசை நிகழ்ச்சிகளும், கொங்கு நாட்டின் பாரம்பரிய வள்ளிக்கும்மி நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றன.