கொடைக்கானலில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்ய தனிக்குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு அனுமதி பெற்று முறையான ரசீது வழங்கி விடுதிகள் செயல்படுகிறதா என்பதையும், டென்ட் ஹவுஸ், ஏ பிரேம், டூம் ஹவுஸ் எனக் கூறி அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த மாதம் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் மூவர் குழுவை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.