சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கடும் எதிர்ப்பையும் மீறி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் தாரமங்கலம் பெரிய ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.