திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சியோடு வாஞ்சியூர் கிராமத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது, இளைஞர்களை தடுத்த கட்சி நிர்வாகிகள், அவர்களின் கையில் கட்சிக் கொடியைக் கொடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.