பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13-ம் தேதி வரை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்த அறிக்கையில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களுக்கும் கூடுதல் சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.