வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, பெருமாள் சொர்க்கவாசலில் பிரவேசம் செய்ய, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, நள்ளிரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலில் காத்திருந்து அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.